சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய கேரள நாட்டிளம் பெண் களுடனே என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன். அதையடுத்து சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் நடித்த இவர் தற்போது ஐந்து படங்களில் நாயகனாக நடித்து வருவதாக சொல்கிறார். இந்த நேரத்தில், தனது வளர்ச்சியை தடுக்க சிலர் சதி செய்து வருவதாகவும் வேதனையுடன் சொல்கிறார்.
அதுகுறித்து அபிசரவணன் மேலும் கூறுகையில், நான் நடித்து வரும் படங்களில் என்னுடன் நடிக்கும் அனைவரிடமும் நான் நட்புடன் நெருங்கி பழகுவேன். அதனால் என்னுடன் நடிக்கும் கதாநாயகிகள் நல்ல தோழிகளாகி விடுவார்கள். ஆனால் அப்படி நான் அவர்களுடன் தோழமையுடன பழகுவதை பார்த்து நன் கதாநாயகிகளுடன் ஊர் சுற்றுவதாக எனக்கு படவாய்ப்பு கொடுத்தவர்களே என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்பிவிட்டு வருகின்றனர்.
மேலும், பட்டதாரி படத்தில் நடித்தபோது எனது காலை உடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியும் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. அதோடு அந்த படத்தில் என்னை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக ஆடியோ விழாவுக்கு நான் மற்றும் பட நாயகிகள் சென்றிருந்தபோதும், எங்களை யாரையும் மேடைக்கு அழைக்கவில்லை. அதோடு பாடலின் விசுவலை போடாமல் ஆடியோவை மட்டுமே போட்டனர். அந்த அளவுக்கு எனக்கு எதிராக வேலை நடந்தது. அதோடு என்னை, என்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து தவறான வதந்திகளும் பரப்பி விட்டு வருகிறார்கள்.
ஆனபோதும், அது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. என்னைப்பற்றி தெரிந்தவர்கள் யாரும அதை நம்பவில்லை. இப்போதுகூட ஐந்து படங்களுக்கு மேல் நாயகனாக நடித்து வருகிறேன். என் வளர்ச்சியை தடுப்பவர்கள் முன்பு நானும் ஒரு ஆளாகிக்காட்ட வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எண்ணமாக உள்ளது. கண்டிப்பாக நான் சினிமாவில் சாதிப்பேன் என்கிறார் அபி சரவணன்.