படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகைகளைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் நீணடகாலமாக நடந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக அந்த நிலையை மாற்றும் முயற்சியில் பாலிவுட் நடிகைகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில நடிகைகள திருமணத்திற்கு பிறகும் கதாநாயகிகளாகவே நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ள நடிகை அமலாபாலும் தற்போது மீண்டும் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியானதும் அவரை படங்களுக்கு புக் பண்ண பேசி வந்தவர்கள் அப்படியே பின்வாங்கி விட்டார்களாம்.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நடிகைகளை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு வெளியேற்றி விடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதில் ஒரு சிலர் மட்டும் தப்பித்து வருகிறார்கள். அந்த வகையில், நானும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். நடிகைகள் நடிப்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. தொடர்ந்து வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதை நான் நடைமுறைப்படுத்திக்காட்டுவேன் என்கிறார்.