டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என நெடுந்தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதேபோல், கோடீஸ்வரி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சில ஷோக்களும் நடத்தி வருகிறார். அந்த வகையில, சிம்ப்ளி குஷ்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பிரபலங்களை சந்தித்து பேட்டி கண்டவர், தற்போது நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நந்தினி என்றொரு மெகா தொடரை தயாரித்து வருகிறார் குஷ்பு. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சீரியல் ஒன்று நான்கு மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். மேலும், தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடரை, தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
அது மட்டுமின்றி சமீபகாலமாக சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி நேயர்களை கவர்ந்து வருகிறது. அதனால் குஷ்புவும் தனது நந்தினி தொடரை இந்தி தொடர்களுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்தி சீரியல்களுக்கு இணையாக தமிழ் சீரியல்களை பிரமாண்டமாக தயாரிக்க யாரும் முயற்சிக்காத நிலையில், முதன்முறையாக குஷ்பு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்.