நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
கிடாரி படத்துக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பலே வெள்ளையத்தேவா. அவருடன் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரோகினி சசிகுமார் அம்மாவாகவும், சங்கிலி முருகன் தாத்தாவாகவும் நடித்துள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார், பி.சோலை பிரகாஷ் இயக்கி உள்ளார்.
மதுரைக்கார இளைஞனாகவே நடிக்கும் சசிகுமார் இதில் மதுரையில் குடியேறும் வெளியூர் இளைஞனாக நடிக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக தாத்தா பாட்டியுடன் மதுரையில் குடியேறும் சசிகுமாருக்கு வந்த இடத்தில் தன்யாவுடன் காதலும், தாதாக்களுடன் மோதலும் ஏற்படுகிறது. அதை பாட்டி கோவை சரளா உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்கிற கதை. கிட்டத்தட்ட பாட்டி சொல்லை தட்டாதே மாதிரியான கதை என்கிறார்கள்.
இது ஒரு குறுகியகால தயாரிப்பாக எடுத்து முடிக்கப்பட்டு வருகிற கிறிஸ்துமஸ் (25ந் தேதி) அன்று வெளிவருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான சசிகுமார் கூறியதாவது: படத்தின் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்ததால் 50 நாளில் படத்தை முடித்து விட்டோம். தேனி, மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. காமெடி, காதல், ஆக்ஷன் சம அளவில் கலந்து உருவாகி உள்ளது" என்கிறார் சசிகுமார்.