ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அகடம், வந்தாமல, கங்காரு, கோடை மழை, படங்களில் நடித்த ஸ்ரீப்ரியங்கா தற்போது தனது பெயரை ஸ்ரீஜா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். பெயரை மாற்றிய ராசியோ என்னவோ பாவாடை, தாவணி கேரக்டரிலிருந்து விட்டு விடுதலையாகி போலீஸ் அதிகாரியாக மிகமிக அவசரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அமைதிப்படை இரண்டாம் பாகம், கங்காரு படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதனை இயக்குகிறார். கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஹரீஷ் ஹீரோவாக நடிக்கிறார். பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது: சினிமா இயக்கும் ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். மணிவண்ணன் சாருக்காக தயாரிப்பாளர் ஆனேன். மனதிருப்திக்காக கங்காரு படம் தயாரித்தேன். இப்போது இயக்குனராகி இருக்கிறேன். மிகமிக அவசரம் என் மனதில் நீண்ட நாட்கள் ஓடிக்கொண்டிருந்த ஒரு கதை, இப்போது படமாகிறது. இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு "பவுனு பவுனுதான் படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. பாக்யராஜும், ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மிக மிக அவசரம் படத்தில் இந்த கோனேரிப்பட்டி பாலம் முக்கிய இடம் பிடித்துள்ளதால் 23 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறேன்.
மேலும் முக்கிய அம்சமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இது 8கே ரெசொல்யூஷன் அடங்கிய கேமரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடிக்கலாம். இந்த கேமரா இந்தியாவிலேயே முதன்முறையாக 'மிக மிக அவசரம்' படத்தில் தான் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. என்கிறார் சுரேஷ் காமாட்சி.