ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், வடக்கத்திய சிவாஜி. தற்போது 93 வயதாகும் அவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சைக்கு எடுத்து கொண்ட பிறகு பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். தற்போது அவருக்கு கால்கள் வீங்கி உள்ளன. அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென கடுமையான காய்ச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. உடடினயாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு இதுபற்றி கூறும்போது... "அவர் தற்போது நலமாக இருக்கிறார். டாக்டர்களின் சிகிச்சையாலும், ஆண்டவனின் அருளாலும் அவர் இப்போது பழைய நிலைக்கு திரும்பிவிட்டார். அவரது பிறந்த நாளை (வருகிற 11ந் தேதி) அவர் நிச்சயம் கொண்டாடுவார். ரசிகர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.