ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாடு அரசு, மற்றும் திரைப்பட சங்கங்களுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் நடத்தும் சென்னை, சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ந் தேதி தொடங்கி 22ந் தேதிவரை நடக்க இருந்தது. இதில் 65 நாடுகளை சேர்ந்த 165 படங்கள் திரையிடப்படுவதாகவும் இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தையொட்டி சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இண்டோ சினி அப்ரிஷேசன் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 வருடங்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெரும் ஆதரவாக இருந்தார். அவரது திடீர் மறைவு எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வருகிற 14ந் தேதி துவங்குவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 5ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12ந் தேதி வரை ஒரு வாரம் நடக்கும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேதி தள்ளிவைக்கப்பட்டது தவிர நிகழ்ச்சி நிரலில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.