பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஷங்கர் இயக்கும் படம் பற்றிய தகவலோ, புகைப்படங்களோ அதிகாரபூர்வமாக வெளியாகும்வரை மீடியாக்களுக்கு வழங்கப்படமாட்டாது. இந்த வழக்கத்துக்கு மாறாக, '2.0' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை வெளியாகிவிட்டன. டில்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது செல்போனில் எடுக்கப்பட்ட அக்ஷய்குமாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அக்ஷய்குமாரின் தோற்றம் மிரட்டும் வகையில் இருந்தது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட '2.0' ஃபர்ஸ்ட் போஸ்டரிலும் அந்த தோற்றத்திலேயே காட்சியளித்தார் அக்ஷய்குமார். ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதோடு, அவருடைய கேரக்டர் எப்படிப்பட்டது என்பது இத்தனை நாள் ரகசியமாகவே இருந்தது. அக்ஷய் வில்லன் இல்லை, மற்றொரு ஹீரோ என்ற தகவல் ரஜினி வாயாலேயே வெளியானது.
இந்நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்வெளியாகி உள்ளது. அதாவது, சயின்டிஸ்ட் வசீகரனிடம் (ரஜினிகாந்த்) பணியாற்றும் சயின்டிஸ்ட் ரிச்சர்டு என்ற கேரக்டரில்தான் அக்ஷய்குமார் நடிக்கிறாராம். பறவைகளை மிகவும் நேசிக்கும் கேரக்டராம் அவருக்கு. பில்லா 2 நடிகரான சுதான்சு பாண்டேவை அக்ஷய்குமார் சந்திக்கும் வரை எந்த பிரச்சனையும் ஏற்படாதாம். தன் தந்தை புரொபெஸர் போராவின் சாவிற்கு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் சுதான்சு பாண்டே, அப்பாவி அக்ஷய்குமாரை கொடூரமான வில்லனாக மாற்றுவிடுகிறாராம். அதன் பிறகு சிட்டிக்கும், சயின்டிஸ்ட் ரிச்சர்டுக்கு நடக்கும் மோதல்தான 2.0 படத்தின் கதையாம்.