பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவரின் ஆஸ்தான நாயாகியாக இருந்தவர் நடிகை கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் 50-வது பிறந்தநாளையொட்டி கரண் ஜோகர் டிச.,5-ம் தேதி விருந்து கொடுத்தார். இதில் தனது பாலிவுட் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், ஆனால் கஜோலை மட்டும் கரண் அழைக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில் சமீபத்தில் கரணின், ஏய் தில் ஹே முஷ்கில் படமும், கஜோலின் கணவர் அஜய்யின் சிவாய் படமும் ஒரே தேதியில் ரிலீஸானது. இதில் ஏற்பட்ட சிறு பிரச்னையின் காரணமாகவே கரண், கஜோலை விருந்துக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.




