'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவரின் ஆஸ்தான நாயாகியாக இருந்தவர் நடிகை கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் 50-வது பிறந்தநாளையொட்டி கரண் ஜோகர் டிச.,5-ம் தேதி விருந்து கொடுத்தார். இதில் தனது பாலிவுட் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், ஆனால் கஜோலை மட்டும் கரண் அழைக்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில் சமீபத்தில் கரணின், ஏய் தில் ஹே முஷ்கில் படமும், கஜோலின் கணவர் அஜய்யின் சிவாய் படமும் ஒரே தேதியில் ரிலீஸானது. இதில் ஏற்பட்ட சிறு பிரச்னையின் காரணமாகவே கரண், கஜோலை விருந்துக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.