ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவரான சோ ராமசாமி, சென்னையில் காலமானார். சென்னை, எம்ஆர்சி., நகரில் வைக்கப்பட்டுள்ள சோவின் உடலுக்கு நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும், நடிகருமான சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், அவரைப்பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்... அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் எந்த பதவி வகிக்காமலும், 50 ஆண்டுகள் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சோ அவர்கள். பாராட்டு போன்ற விஷயங்களை கேள்விப்பட்டாலே ஓடி ஒளிந்து கொள்வார். ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன். ஒருநாள் மழையில் நானும், அவரும் நின்றிருந்தோம். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர், சார் நீங்களா... என்று கூறி காலில் விழுந்தார். உடனே சோவும் நீங்களா... என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். சரி என்று தோன்றினால் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்பவர், அந்தளவுக்கு தைரியமானவர், யாருக்கும் அஞ்சாதவர். அதேசமயம் அவர் யாரையெல்லாம் விமர்சனம் செய்தாரோ அவர்கள் அனைவருமே இவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அவரிடத்தில் சென்ட்டிமென்ட் இருக்காது, கண்ணீர் விட மாட்டார் என்றார்