என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்கில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலகுறைவால் இரண்டரை மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று(டிச.,5-ம் தேதி) இரவு 11.30 மணியளவில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உடலுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ், ரஜினி, இளையராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஜெயலலிதாவின் உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., சமாதி அருகே கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் செய்தனர்.
ஜெயலலிதா நம் பார்வையிலிருந்து விலகிவிட்டாரே தவிர, நம் இதயத்தில் இருந்து அல்ல... என்பது மட்டும் திண்ணம்...!