பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களில் ஜரீன் கானும் ஒருவர். ஹேட் ஸ்டோரி-3 படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சீனாவில் வசிக்கும் இந்திய தயாரிப்பாளர் ஒருவர், அர்பாஸ் கான் மற்றும் அஷ்மித் படேலை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ஜரீன் கானை நடிக்க கேட்டனர். ஆனால் படத்தில் அர்பாஸ் நடிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நடிகை ஜரீன் நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தாலும் அர்பாஸ் நடிப்பதாலே இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம் ஜரீன். எதற்காக ஜரீன் மறுத்தார், ஜரீனுக்கும், அர்பாஸ்க்கும் என்ன பிரச்னை என்று எல்லோரும் கேட்க துவங்கியுள்ளனர்.




