ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரின் மறைவு தமிழகம் முழுக்க சோக அலையை உருவாக்கியுள்ளது. பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகினரும் ஏராளமானபேரும் அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரளான நடிகர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், குட்டி பத்மினி, கோவை சரளா, கவுதமி, ராஜேஷ், நந்தா, ஸ்ரீமன், அஜய் ரத்னம், ராஜா உள்ளிட்ட பலர் நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர்.... இன்று மறைந்தது தனி மனிதர் அல்ல, ஒரு சகாப்தம் நிறைவுபெற்று இருக்கிறது. நடிகையாக, அரசியல் தலைவராக அவர் பயணித்த எல்லாவற்றிலும் உச்சத்தை பெற்றிருக்கிறார். பெண் நினைத்தால் எந்தளவுக்கு முன்னேற முடியும், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு என்பது அவர் ஒரு உதாரணம். எங்களுடைய சங்கத்தில் அவர் மூத்த உறுப்பினராக இருந்தது எங்களுக்கு எல்லாம் பெருமை. அவரின் சக்தி, செயல், மனோதைரியம் எல்லாம் யாருக்கும் வர முடியாது. அவரை இழந்து வாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர் பயணித்த பாதையில் நாங்கள் பயணிப்போம்.
இவ்வாறு நாசர் கூறினார்.