அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி |
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரின் மறைவு தமிழகம் முழுக்க சோக அலையை உருவாக்கியுள்ளது. பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகினரும் ஏராளமானபேரும் அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரளான நடிகர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், குட்டி பத்மினி, கோவை சரளா, கவுதமி, ராஜேஷ், நந்தா, ஸ்ரீமன், அஜய் ரத்னம், ராஜா உள்ளிட்ட பலர் நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர்.... இன்று மறைந்தது தனி மனிதர் அல்ல, ஒரு சகாப்தம் நிறைவுபெற்று இருக்கிறது. நடிகையாக, அரசியல் தலைவராக அவர் பயணித்த எல்லாவற்றிலும் உச்சத்தை பெற்றிருக்கிறார். பெண் நினைத்தால் எந்தளவுக்கு முன்னேற முடியும், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு என்பது அவர் ஒரு உதாரணம். எங்களுடைய சங்கத்தில் அவர் மூத்த உறுப்பினராக இருந்தது எங்களுக்கு எல்லாம் பெருமை. அவரின் சக்தி, செயல், மனோதைரியம் எல்லாம் யாருக்கும் வர முடியாது. அவரை இழந்து வாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர் பயணித்த பாதையில் நாங்கள் பயணிப்போம்.
இவ்வாறு நாசர் கூறினார்.