பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த ஆண்டு சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்தபோது பல இளவட்ட நடிகர்கள் களமிறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நடிகர் சங்கம் சார்பில் விஷால் டீமும் மழை வெள்ளத்தில் இறங்கி உதவி செய்து வந்தனர். அப்போது நடிகர் சாந்தனு ஒரு பைக்கில் ஊர்ஊராக சென்று நிவாரண உதவி செய்தாராம். இதுபற்றி நடிகர் விஷால் கூறுகையில், சாந்தனு சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான். அதை நான் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அவர் செய்த உதவிகளைப்பார்த்துதான் தெரிந்து கொண்டேன். மழையில் நனைந்தபடியே வீதிவீதியாக சென்று மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் செய்தார். அந்த வகையில் அவர் ஒரு ரியல் ஹீரோவாக செயல்பட்டார்.
மேலும், சாந்தனுவை நான் எனது தம்பியாகத்தான் பார்க்கிறேன். அவர் நடித்த படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். குறிப்பாக, முதல் வரிசையில் இருக்கும் பத்து நடிகர்களில் அவரும் ஒருவராக வர வேண் டும். தற்போது அவர் நடித்து வரும் படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கும். ஒரு சகோதரனாக சாந்தனுவின் வெற்றிக்கு எப்போதும் நான் உறுதுணையாக இருப்பேன் என்கிறார் விஷால்