பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

குத்து ரம்யாவிற்கு பிறகு பெங்களூரில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த இன்னொரு புதுவரவு நடிகையான ஷைனியும் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில் நான் செகண்ட் லீடாக நடித்தேன். அதையடுத்து இப்போது மியாவ், வீரய்யன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும், இந்த படங்களில் வீரய்யனில் கிராமத்து கதையில் சிங்கிள் நாயகியாகவும், மியாவ் படத்தில் நகரத்து கதையில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராகவும் நடிக்கிறேன். இதில் மியாவ் படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடித்துள்ள நான் தொடர்ந்து கதைக்கு தேவையான அளவு கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறும் ஷைனி, கர்நாடகத்து பெண்ணாக இருந்தபோதும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது. அதனால் சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து புதிய படங்களுக்கான கதைகள் கேட்டு வருகிறேன் என்கிறார்.