மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
குத்து ரம்யாவிற்கு பிறகு பெங்களூரில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த இன்னொரு புதுவரவு நடிகையான ஷைனியும் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில் நான் செகண்ட் லீடாக நடித்தேன். அதையடுத்து இப்போது மியாவ், வீரய்யன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும், இந்த படங்களில் வீரய்யனில் கிராமத்து கதையில் சிங்கிள் நாயகியாகவும், மியாவ் படத்தில் நகரத்து கதையில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராகவும் நடிக்கிறேன். இதில் மியாவ் படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடித்துள்ள நான் தொடர்ந்து கதைக்கு தேவையான அளவு கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறும் ஷைனி, கர்நாடகத்து பெண்ணாக இருந்தபோதும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது. அதனால் சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து புதிய படங்களுக்கான கதைகள் கேட்டு வருகிறேன் என்கிறார்.