ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பார்த்திபன் இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அதே விழாவில் தனது குருநாதரான கே.பாக்யராஜ்க்கும் பாராட்டு விழா நடத்தினார் பார்த்திபன்.
அப்போது கே.பாக்யராஜ் பேசுகையில்,
சினிமாவில் கடைசிவரை கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் எனது தாரகமந்திரம். எனக்காக பெரிய விழா நடத்தியுள்ளார் பார்த்திபன். ஆனால் நான் சிஷ்யன் என்கிற முறையில் என் குருவுக்கு அவரது பொற்பாதங்களை தொட்டு வணங்கி அவருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். எனக்கு எல்லாமே பாரதிராஜாதான். அதனால் எனக்கு செய்றதும் ஒன்னுதான் அவருக்கும் செய்றதும் ஒன்னுதான். எனக்கு இப்படியொரு பாராட்டு விழாவை நடத்தப்போவதாக பார்த்திபன் முதலில் சொல்லவில்லை. கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் ஆடியோ விழா வைத்திருப்பதாக சொல்லிதான் டேட் கேட்டார். நானும் அதுதான் நினைத்துக்கொண்டு வந்தேன். இங்கு வந்து பார்த்த பிறகு எனக்கு எதுக்குய்யா இதெல்லாம் என்றேன். ஆனால் எனக்கு மனசுக்குள்ள ஒரு குறையாவே இருக்கு என்றார். ஆனால் விதை போட்டவர் பாரதிராஜா. அதனால் அவருக்கு பாராட்டு விழா செய்து எனக்கு செய்தால்தான் சரியாக இருக்கும். ஆனாலும் எனக்கு செய்தாலும் அவருக்கு செய்த மாதிரிதான். அதேபோல் எனக்கு முன்னாடியுள்ள சீனியர்கள் அனைவருக்கும் இதை நான் காணிக்கையாக்குகிறேன்.
மேலும், ஸ்ரீதர், கே.பாலசந்தர், பீம்சிங் போன்ற பல டைரக்டர்களின் படங்களைப்பார்த்து பார்த்து அவர்கள் படங்களில் இருந்த விசயங்களை எனக்குள் தேக்கி வைத்துதான் நான் கதைகள் பண்ணினேன். நான் புதுசாக எதையும் செய்யவில்லை. அவர்களின் படங்கள்தான் எனக்கு இன்ஷ்பிரேசனாக இருந்தது. சின்ன வீடு படத்தில் எனக்கு மனைவியாக நடித்த கல்பனாவிடம் நான் பேசும்போது, இவ்ளோ குண்டா இருக்கிற நீயெல்லாம் எனக்கு ஆசைப்படலாமா? என்பேன், அப்போது நான் ஒரு டயலாக் வைத்திருந்தேன். ஆனால் பார்த்திபன், மாமா உங்க தோள்ல போடுற துண்டா இல்லேன்னாலும், கால்ல போடுற செருப்பாவாவது நான் இருப்பேன் மாமா என்ற டயலாக்கை வைக்க சொன்னார். ரொம்ப நன்றாக இருந்தது. அதைத்தான் படத்தில் வைத்தேன். இந்த மாதிரி பல உதவி இயக்குனர்கள் சொன்னதை படங்களில் வைத்துள்ளேன். அந்த மாதிரி செய்யும்போது அவர்களுக்கும் திருப்தி. தங்களாலும் நன்றாக சிந்திக்க முடிகிறது என்கிற நம்பிக்கை ஏற்படும்.
மேலும், நான் சினிமாவுக்குள் வரும்போது எதுவுமே தெரியாமல்தான் வந்தேன். பாரதிராஜா சாரிடமிருந்துதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். அதனால் எனக்கு கிடைக்கக்கூடிய எல்லா மரியாதைகளும் எங்க டைரக்டருக்கு சமர்ப்பணம். இந்த விழாவுக்கு எங்க டைரக்டர் வருகிறார் என்றதும் எனக்கு பயமாகிடுச்சு. அவருக்கு நாம எதுவுமே செய்யலை. இந்த பார்த்திபன் நம்மளை வேற கோர்த்து விடுறானே என பயந்தேன். இந்த விழாவுக்கு அவர் வந்ததை பார்க்கையில், ஒரு பெத்த புள்ளைக்கு என்ன நடக்கிறது என்பதை எங்க அம்மா பார்க்க முடியல. அதை அவர் பார்த்து ரசித்துக்கெண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.
சாந்தனுவைப்பற்றி நான் பெருசாக கவலைப்படல. ஏன் கவலைப்படலேன்னா, விஜய், விக்ரமெல்லாம் எத்தனை படங்கள் பண்ணிட்டு பிரபலமானாங்கன்னு தெரியும். அவனுக்கு டேலன்ட் இல்லேன்னாதான் நான் கவலைப்படனும். டயம்ன்னு ஒன்னு வரும்போது வந்திடுவான். எங்க டைரக்டர்கூட யோவ் அவன் நல்லா இருக்கான். ஆனா ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்கிய்யா என்று சொல்லிக்கிட்டிருக்காரு. அவர் பார்க்காத கேரக்டர்களே கிடையாது. அவரோட ஜட்ஜ்மென்ட் அப்படி இருக்கும். அதனால் சாந்தனுவக்குன்னு ஒரு டயம் வரும்போது வந்திடுவான். அதுவும் பார்த்திபன் படத்துல வந்தா ரொம்ப சந்தோசம் என்றார்.