காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
அரண்மனை-2, ஜில் ஜங் ஜக் படங்களுக்குப்பிறகு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சேர்த்து 4 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் சித்தார்த். இதில் சைத்தான் கா பச்சா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், மற்ற 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், நீண்டகாலமாக காதல் நாயகனாக வலம்வந்து கொண்டிருந்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் முதன்முறையாக ஆக்சன் களத்தில் இறங்கினார். அதையடுத்து இப்போது ஆண் என்ற படத்தில் ஹாரர் கதையில் நடித்து வருகிறார் சித்தார்த்.
அரண்மனை-2 படத்திலேயே அவர் ஹாரர் கதையில் நடித்தபோதும் இந்த படம் இன்னும் அதிரடியான கதையில் உருவாகிறதாம். சமீபகாலமாக ஏராளமான படங்கள் பேய் கதைகளில் வந்து கொண்டிருப்பதால் தனது படம் அந்த படங்கள் சாயலில் இல்லாமல் புதுமையான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் சித்தார்த், தனது கெட்டப்பை படம் திரைக்கு வருவது வரை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.