ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் அவ்வப்போது இணைய பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். அல்லது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகி விடுகிறார்கள். அந்த வகையில், சமீபகாலமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஏகப்பட்ட கலாய்ப்புகளுக்கு ஆளாகி மனசுடைந்து போயிருக்கிறார். இதனால் தற்போது அவர் சமூகவலை தளத்தை விட்டே வெளியேறி விட்டார்.
இந்த நிலையில், தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும், இணைய பக்கத்தில் கருத்து வெளியிட்டு ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம், இந்தியாவிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப் பட வேண்டும். அப்போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று அறிவித்தது.
ஆனால் இந்த புதிய சட்டத்தை சிலர் ஆதரித்தபோதும், பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, தியேட்டர்களில் தேசியகீதம் இசைப்பதை தான் வரவேற்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது இந்த கருத்துக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனபோதும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை திவ்யதர்ஷினி.