ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைப்பட இசை அமைப்பாளர் தாஜ்நூர் திருக்குறளை நாட்டுப்புற இசை பாடலாக உருவாக்கி அதனை ஆல்பமாக தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில், நடிகர் சிவகுமார் முன்னிலையில் வைரமுத்து வெளியிட்டார். விழாவில் திருக்குறளை நாட்டுப்புற பாடலாக எழுதிய ஐ.ஏ.எஸ்.அதிகாரி பாலகிருஷ்ணன், ஓவியம் வரைந்த டிராவ்ஸ்கி மருது, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், நீதிபதி மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாட்டுக்குறள் ஒவியப் பாடல் நூலும் வெளியிடப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் வள்ளுவருக்கு மணற்சிற்பம் அமைத்து மரியாதை செலுத்திய உலகப் புகழ்பெற்ற இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடிகர் சிவக்குமாரால் கௌரவிக்கப்பட்டார். சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய திருக்குறள் பற்றிய மணல் ஓவிய அசைவூட்டுப்படம் திரையிடப்பட்டது.
வாசல் தோறும் வள்ளுவம் என்ற இந்த இசை அரங்கேற்றத்தில் சின்னப் பொண்ணு, வேல்முருகன், நின்சி வின்சென்ட், பிரபு, மீனாட்சி இளையராஜா, அந்தோணிதாஸ், கவிதா கோபி ஆகியோர் பாடினர். ரோஜா முத்தையா நூலகத்தின் சார்பில் 1812ல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள் முதல் அச்சுப்பிரதியின் மீள் பதிப்பும் வெளியிடப்பட்டது. விழாவை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சங்கர சரவணன் ஆகியோர் தொகுத்து வழங்க வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக்குழுவின் நிறுவனர் சி. ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்