ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாலு படம் வெளியாவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட சிக்கல்களில் சிக்கியிருந்த சிம்பு, அந்த படத்தின் ரிலீசுக்குப்பிறகு படிப்படியாக பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்தார். என்றபோதும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வந்தபோது அவருக்கும், கெளதம்மேனனுக்குமிடையே சம்பள பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு அப்படம் வெளிவந்தது. நல்ல விமர்சனங்களை பெற்ற அந்த படம் வெற்றி பெற்றதால் இப்போது சிம்பு முன்பை விட அதிகமாக உற்சாகமாகி விட்டார்.
மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து அவ்வப்போது ஏதேனும் புதிய தகவல்களை டுவிட்டரில் வெளியிட்டு தனது ரசிகர்களை விழிப்புடனேயே வைத்திருக்கிறார். அந்த வகையில், டிரிபிள் ஏ படத்தின் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா கேரக்டர்களின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதற்கு முன்பே ரசிகர்களுக்கு அறிவித்து அதன்பிறகு ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தவர், இப்போது வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று தான் ஒரு ட்ரீட் கொடுக்கப்போவதாக ஒரு சஸ்பென்ஸ் அறிவிப்பை மீண்டும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் சிம்பு.