ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: வேந்தர் மூவிஸ் மதனுடன் கூட்டு சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டனரா என, மேலும், சில சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில், சீட் வாங்கி தருவதாக, 85 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சினிமா பட அதிபர், வேந்தர் மூவிஸ் மதன், திருப்பூரில், தோழி வர்ஷா வீட்டில் பதுங்கி இருந்த போது கைதானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போரூரில் வீடு : இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மதனுக்கு, வடபழனியில் இரண்டு வீடுகள் உள்ளன. போரூரில் உள்ள வீடு, அவரது தாய் தங்கம் பெயரிலும்; அண்ணா நகர் வீடு, முதல் மனைவி சிந்து பெயரிலும் உள்ளது. கொட்டிவாக்கத்தில், அவரது சகோதரர் வீடு உள்ளது; அது பற்றி விசாரித்து உள்ளோம். பிரபல தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரியில், சீட் வாங்கி கொடுத்து கிடைத்த கமிஷன் தொகையில், மதன் சினிமா பட நிறுவனம் துவங்கியுள்ளார்.
அப்போது, அம்மா கிரியேஷன்ஸ் பட அதிபர் சிவாவும், ஏழு ஆண்டுகள் அவருடன் இருந்துள்ளார். அவரது, கல்லூரி தோழரும், வேந்தர் மூவிஸ் பங்குதாரருமான, பாலகுருவும் உடன் இருந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும், அவரை விட்டு பிரிந்து, மீண்டும் படம் தயாரிக்கத் துவங்கினர். இந்த இருவருடனும், மதன் நெருக்கமாக இருந்ததால், பண மோசடியில், இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தது. அதனால், இருவரிடமும் பல மணி நேரம், முதல் கட்ட விசாரணை நடந்தது. அப்போது, சினிமா பைனான்சியர்கள், ராம் மற்றும் ராம் வாசு ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி, சினிமா தயாரித்து வருவதாக, இருவரும் கூறினர். இது குறித்து, சினிமா பைனான்சியர் இருவரிடமும் விசாரித்து வருகிறோம்.
நிர்வாகிகள் பதில் : அத்துடன், மதனுக்கு பின்னால் உள்ள சினிமா பிரபலங்கள் குறித்தும், அவரது தோழியரிடமும் விசாரிக்க உள்ளோம். மாணவ, மாணவியரிடம் வசூலித்த பணத்தை, கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்து விட்டதாக, மதன் கூறி வருவதால், கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் இருவருக்கு, சம்மன் அனுப்பினோம். ஊரில் இல்லை என, அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம் பதில் மனு அனுப்பி உள்ளனர். மதன், சென்னையில் தலைமறைவான நாளில் இருந்து, திருப்பூரில், தோழி வர்ஷா வீட்டில் பதுங்கி இருந்த நாள் வரை செய்த தில்லுமுல்லுகள் குறித்தும் விசாரிக்கிறோம். அவர் வட மாநிலங்களில் பயன்படுத்திய காரும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மதன், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் சரளமாக பேசுகிறார். இதுவே அவரது பலம்; பெண்கள் சகவாசமே அவரது பலவீனம். இவ்வாறு போலீசார் கூறினர்.
சைவ உணவு பிரியர் : விசாரணைக்கு மதன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவ்வப்போது, தடம் மாறிவிட்டேனே... என, வருத்தப்படுகிறார். நான், சைவ உணவு பிரியன்; இதுவரை, அசைவ உணவை தொட்டுக்கூட பார்த்தது இல்லை என்கிறார் என, போலீசார் கூறினர்.