ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரத்குமார், ராதாரவியை நீக்கிய, நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு, நடிகை ராதிகா பகிரங்க சவால் விடுத்துள்ளார். நடிகர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா கூறியதாவது: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தை, மாற்ற வேண்டுமானால், 21 நாட்களுக்கு முன், நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இடமாற்றம் தொடர்பான எந்த தகவலையும், ஆயுள் உறுப்பினரான எனக்கு தெரிவிக்கவில்லை. நடந்தது பொதுக்குழுவே அல்ல; நடிகர்களுக்குள் நடந்த பாராட்டு விழா மட்டுமே. கூட்டத்திற்கு சென்ற பல நடிகர், நடிகையர், சிறிது நேரத்திலேயே திரும்பி விட்டனர்.
இந்நிலையில், யாரை வைத்து, ஓட்டு போட்டு, சரத்குமார், ராதாரவியை நீக்கினீர்கள்; வெறும், 90 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று, வெற்றி பெற்றதை மறக்க வேண்டாம்.
மன்மோகன் சிங் போன்றவர் நாசர்; அவர் தலைவர் மட்டுமே. விஷாலும், கார்த்தியும், ஏதோ ஒரு பகையை வைத்து, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர். எங்கள் மீது சுமத்தப்பட்ட, ஊழல் குற்றச்சாட்டையே, அவர்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. அவர்கள் நடத்திய, நட்சத்திர கிரிக்கெட் தொடர்பாக, அவர்கள் வெளியிட்ட கணக்கிலேயே, பல முறைகேடு இருப்பது தெரிய வந்துள்ளது.மேக்கப் செலவு பல கோடி ரூபாய்; ஈவன்ட் மேனேஜருக்கு, 1.5 கோடி ரூபாய் என, கணக்கு காட்டியுள்ளனர்.
கார்த்தியுடன் தொடர்புள்ள பட நிறுவனத்திடமிருந்து, டிரஸ்ட் மூலமாக, 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளீர்கள்; இதற்கு, யாரிடம் ஒப்புதல் வாங்கினீர்கள். டிரஸ்டில், நிரந்தர தலைவராக சரத்குமாரும், ராதாரவியும் நீடிக்க எடுத்திருந்த முடிவை, நாங்கள் மாற்றியுள்ளோம் என, கார்த்தி கூறியுள்ளார். இது பற்றி விவாதம் மட்டும் நடந்ததே தவிர, அவ்வாறான எந்த முடிவும் எடுக்கவில்லை. நான், பகிரங்க சவால்விடுகிறேன்; அப்படியொரு ஆதாரத்தை, கார்த்தி காட்ட முடியுமா? இவ்வாறு ராதிகா கூறினார்.