ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, சரத்குமார், ராதாரவி ஆகியோர், புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சரத்குமார், பொதுச் செயலராக ராதாரவி இருந்தனர். 2015 அக்டோபரில், சங்க நிர்வாகிகள் தேர்தலில் சரத்குமார், ராதாரவி தோல்வி அடைந்தனர். நடிகர்கள் விஷால், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நடிகர் சங்க அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாக, சரத்குமார் மற்றும் ராதாரவியை சங்கத்தில் இருந்து, சஸ்பெண்ட் செய்தனர். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்; மனு, நிலுவையில் இருந்தது.
நேற்று முன்தினம் நடந்த, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், சஸ்பெண்ட் முடிவை எதிர்த்த வழக்கு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நடிகர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தில் இருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்; எனவே, சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கு அவசியமற்றது, என்றார்.
இதையடுத்து, சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, மனுதாரர்கள் விரும்பினால் மனு தாக்கல் செய்யலாம், என, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.