ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"முக்கோண காதல் கதை சினிமாவுக்கு புதிதில்லை. ஆனால் ஒரு த்ரில்லர் படத்தில் முக்கோண காதல் கதையை சொல்கிறோம்" என்கிறார் அதே கண்கள் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது:
படத்தின் ஹீரோ கலையரசன் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். பின்னர் அவருக்கு பார்வை வந்து விடும். பார்வையற்று இருக்கும்போது ஒரு காதல், பார்வை வந்த பிறகு ஒரு காதல் என முக்கோண காதலில் ஆரம்பிக்கும் கதை. கலையரசனுக்கு பார்வை வந்த பிறகு த்ரில்லராக மாறும் வித்தியாசமான திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. த்ரில்லர் படம் என்பதால் இசை அமைப்பாளர் ஜிப்ரான் கவனமாக இசை அமைத்து வருகிறார். ஜனனி அய்யர் பத்திரிகை நிருபராகவும், ஷிவதா ஜவுளிக் கடையில் வேலை செய்பவராகவும் நடித்திருக்கிறார்கள். காமெடி ரோலில் பால சரவணன் நடித்துள்ளார், கதையை நகர்த்தி செல்பவரும் அவர்தான் என்கிறார் ரோஹின் வெங்கடேன்.
திருக்குமரன் என்டர்டெய்ன்ட்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் அரவிந்த்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.