மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கடந்த வெள்ளி அன்று திரைக்கு வந்துள்ள பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ராசிகா. இந்த படத்தில் தனது நடிப்புக்கான ரெஸ்பான்ஸை தெரிந்து கொள்ள தினமும் சென்னையில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ஆடியன்சோடு படம் பார்த்து வருவதாக சொல்லும் அவர், என் வீட்டில் கூட நான் அடிவாங்கியதில்லை. ஆனால் இந்த படத்திற்காக நிறைய அடி வாங்கினேன் என்கிறார்.
அதுகுறித்து ராசிகா மேலும் கூறுகையில், நான் நடித்த முதல் படம் பகடையாட்டம். கல்லூரி அகிலுக்கு ஜோடியாக நடித்த அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. அதன்பிறகு நடித்த பட்டதாரி படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு நண்பர்கள் பலரும் பாராட்டுகிறார்கள். அது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்துள்ளது. மேலும், முதல் படத்திலேயே கடைசியில் நான் இறந்து விடுவது போன்று காட்சி இருந்ததால் முதலில் பீல் பண்ணினேன். ஆனால் இப்போது அதுதான் படம் பார்த்தவர்களின் மனதில் எனக்கு இடம்பிடித்துக்கொடுத்திருக்கிறது. ஆக, டைரக்டர் எனக்கு நல்ல வேடம்தான் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் நானும் ஹீரோவும் போலீஸ் ஸ்டேசனில் சந்திக்கும் காட்சியில் ஊர்க்காரர்கள் எங்களை பிரிப்பார்கள். அப்போது என்னைச்சுற்றி ஆண்களாக இருந்தனர். இழுக்கும்போது அடியெல்லாம் விழுந்தது. டைரக்டர் கட் சொல்வ தற்கு முன்பே என்னை தூக்கி வெளியில் போட்டு விட்டனர். என் அண்ணனாக நடித்தவர்கூட என்னை அடிக்கும் காட்சியில் நிஜமாலுமே என் மீது அடி விழுந் தது. அந்த அளவுக்கு நிஜமான தங்கை போன்றே நினைத்து அடித்தார். என் வீட்டில்கூட நான் இவ்வளவு அடி வாங்கியதில்லை. ஆனால், இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து கடைசி வரை அடிவாங்கியிருக்கிறேன்.
என் பெற்றோர் பட்டதாரி படத்தைப்பார்த்து விட்டு ஆனந்தத்தில் அழுதனர். அழுத அளவுக்கு நான் நடித்திருக்கிறேன் என்கிறபோது ஏதோ சாதித்த திருப்தியை கொடுத்தது. படத்தில் நடித்தபோது 100 சதவிகிதம் நன்றாக நடித்தது போன்று தெரிந்தாலும், இப்போது படம் பார்க்கையில் இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்கிற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் இனிமேல் நடிக்கிற படங்களில் இன்னும் சிறப்பாக நடிக்க முயற்சி எடுப்பேன். படத்துக்குப்படம் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து, எந்த வேடம் கொடுத்தாலும் ராசிகா சிறப்பாக நடிப்பார் என்கிற பெயரை உருவாக்குவேன்.
மேலும், நாம் கனவு காண்பதை நடத்திக்காட்டுவது இந்த சினிமா மட்டும்தான். அதனால் எனக்கு பிடிச்சிருந்தால் எந்த மாதிரி வேடத்திலும் ஸ்கோர் பண்ணு வேன். முக்கியமாக நான் ரசித்த நடிகைகளான குஷ்பு, ரேவதி, சுகாசினி, கோவை சரளா பேன்ற நடிகைகளை மாதிரி நடிக்க முயற்சி எடுப்பேன். கிளாமர் என்கிறபோது என் உடல்கட்டுக்கு செட்டாகும் அளவுக்கு நடிப்பேன். சாரியில் இடுப்பு தெரிவது சரி. ஆனால் இடுப்பு தெரிவதற்காக சாரி கட்டக்கூடாது. அந்த மாதிரி கிளாமரை ரசிக்கும் அளவுக்கு வெளிப்படுத்துவேன். ஆனால் வல்கராக நடிக்க மாட்டேன். வல்கரை யாரும் ரசிக்க மாட்டார்கள் என்பது எனக்கும் தெரியும். அதனால் லிமிட் தாண்டாமல் நடிப்பேன். முக்கியமாக பிகினி உடையணிந்து நடிக்க மாட்டேன் என்று சொல்லும் ராசிகா, கிளாசிக்கில், மோகினியாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவராம். நடனத்தில் இருந்து ஆர்வம் காரணமாகத்தான் சினிமா நடிகையானதாகவும் சொல்கிறார்.