ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குஷ்பு லீடு ரோலில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலில்தான் முதன்முதலாக நான் நடித்தேன். பின்னர், கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடரில் ஒரு நிருபர் வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு பொம்மலாட்டம் தொடரில் நடித்தேன். நான் நடித்த வேடங்கள் சிறியது என்றாலும், பேசப்பட்ட வேடங்கள் என்கிறார் நடிகர் சுதாகர்.
அவர் மேலும் கூறும்போது, பல சீரியல்களில் நடித்தபோதும், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்து மறக்க முடியாது. அவரது அமுதா ஒரு ஆச்சர்யக்குறி தொடரில் நிருபராக நடித்த நான், ஒரு டைரக்டருக்கும், ஹீரோயினிக்கும் இருக்கும் காதலை பத்திரிகையில் எழுதி விடுவேன். அதனால் அந்த டைரக்டருக்கும், எனக்குமிடையே பிரச்சினை வரும். அதோடு, நேத்து வர சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சவன் இன்னைக்கு டைரக்டராகிட்டே என வசனம் பேசுவேன். அதனால் அந்த நேரத்தில் பல டைரக்டர்கள் என்னை தவிர்த்தனர். ஆனபோதும் நான் கவலைப்படவில்லை. கே.பாலசந்தர் சீரியலில் நடித்ததை பெருமையாக எடுத்துக்கொண்டேன். அதோடு சீரியல்களில் இன்னும் அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
மேலும், தற்போது காதல் வழக்கு, மதுரை நரிக்குறவர் போன்ற படங்களிலும் நடிக்கிறேன். பெரிய திரையில் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டபோதும் சீரியலை நான் தவிர்க்கவில்லை. சினிமா-சின்னத்திரை இரண்டிலும் வெயிட்டான வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் சுதாகர்.