சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் நிரந்தரமாக நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவிற்கு பிறகு, நடிகர் சங்க நிர்வாகிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
அதில், பொதுச் செயலாளர் விஷால் அளித்த பேட்டி:
அறக்கட்டளையின் விதிகளை மீறியதால் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சங்க நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, அவர்கள் இருவரையும், சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நீக்கம் குறித்து அவர்களுக்கு முறையாக கடிதம் அனுப்பப்படும்.
பொதுக்குழு கூட்டம் சட்டப்படி முறையாக நடத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது என சொல்லவில்லை.
நடிகர் கமல் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அனுமதி பெற தகுதியற்றவர்கள் சிலர் உள்ளே நுழைய முயற்சித்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய அலுவலகத்தில் கல் வீசி தாக்கியிருக்கிறார்கள். கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் உதவியால் பொதுக்குழு கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.8.5 கோடி நிதி கையிருப்பில் உள்ளது. நடிகர் சங்கத்திற்காக படம் எடுப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகே எனது திருமணம். நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் முதல் திருமணம் என்னுடையதாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொன் வண்ணன் பேசுகையில், " நடிகர் சங்க நிலத்தை மீட்பதற்கே இவ்வளவு நாட்கள் ஆகி உள்ளது. கட்டடம் கட்வதற்கு சி.எம்.டி.ஏ.,வின் அனுமதி பெற வேண்டும். 3 வருடங்களுக்குள் கட்டடம் கட்டி முடிக்க தீர்மானித்துள்ளோம்" என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக, நடிகர் ராதா ரவி தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், " நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டத்தை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். தற்போது உள்ள நிர்வாகிகள் ஒரு வருடத்தில் 750 பேரை சங்க உறுப்பினர்களாக முறைகேடாக நியமித்திருக்கிறார்கள். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படவில்லை" என கூறினார்.