ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சென்னை: மோதலுடன் நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், முன்னாள் நிர்வாகிகள், சரத்குமாரும், ராதாரவியும், சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின், 63வது பொதுக்குழு கூட்டம், தி.நகரில் உள்ள சங்க வளாகத்தில், நேற்று நடந்தது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரியில் நடப்பதாக இருந்த பொதுக்குழு, கல்லுாரி நிர்வாகம் மற்றும் போலீசாரின் அனுமதி மறுப்பால், தி.நகருக்கு மாற்றப்பட்டது.
கதவு மூடப்பட்டது, அடிதடி மோதல்: பொதுக்குழுவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கிய, 40 நிமிடங்களிலேயே, வளாக கதவு மூடப்பட்டது. அப்போது, 20க்கும் மேற்பட்டோர், நாங்களும் நடிகர் சங்க உறுப்பினர்கள் தான்; எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மோதல் தீவிரமாகி, கருணாஸ் கார் மீது கல் வீசி தாக்கப்பட்டது. இதில், கண்ணாடி நொறுங்கியது. போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்தனர். மோதலில் ஈடுபட்ட, 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை : பின், பொதுக்குழு கூட்டம் துவங்கியது. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம், கரண் உள்ளிட்ட, நடிகர்கள் பங்கேற்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல், நயன்தாரா, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
சரத்குமார், ராதாரவி நிரந்த நீக்கம் : கூட்டத்தில், முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலர் ராதாரவி உள்ளிட்டோரை, சங்கத்தில் இருந்து, நிரந்தரமாக நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூறியதாவது: பொதுக்குழு கூட்டத்திற்கு வரும்படி, யாரையும் கட்டாயப் படுத்தவில்லை; அவர்கள் விருப்பப்படி வந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம், வெற்றிகரமாக நடந்தது. துவக்கத்தில் தகராறு செய்தோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசில் புகார் : தாக்குதலில், சங்க ஊழியர் அனந்த நாராயணன் உள்ளிட்ட இருவர் காயம் அடைந்துள்ளனர். வடபழனியில் உள்ள, விஷாலின் அலுவலகம், கல் வீசி தாக்கப்பட்டுள்ளது. கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, செயற்குழுவில் எடுத்த தீர்மானத்தின் படி, முறைகேடாக செயல்பட்ட, சரத்குமார், ராதாரவி ஆகியோர், சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகின்றனர். கடனில் இருந்த சங்கத்தில், தற்போது, 8.5 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது.சங்க அறக்கட்டளைக்கு நன்கொடை தரும் அளவுக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம். மூன்றாண்டிற்குள், சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சட்டப்படி சந்திப்பேன் : நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலர் ராதாரவி கூறியதாவது: நடந்தது பொதுக்குழு அல்ல; விழா மட்டுமே. எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க விஷால் தரப்பு போராடி வருகிறது. நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கணக்கு வழக்குகளில், குளறுபடிகள் உள்ளன. காரணம் கேட்டோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்கள் மீதான, காழ்ப்புணர்ச்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கியதற்கு, கோர்ட் மூலம் தடை பெற்றுள்ளேன். என்னை நீக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. இதை சட்டப்படி சந்திப்பேன். அவர்களை, பின்னால் இருந்து இயக்குவோர், எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே நிரந்தரமாக அனுப்பப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., நடிகருக்கு தொடர்பு? : நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடந்த போது, நடிகர் கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, நடிகர் ஒருவரின் பெயரை, அவர் கூறியதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை கோரி, கருணாஸ் ஆதரவாளர்கள் போலீசில் புகார் செய்ய உள்ளனர். அந்த நடிகருக்கும், கருணாசுக்கும் இடையே, ஒரு வாரத்திற்கு முன், கட்சி பணிகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. காமெடி நடிகர் ஒருவர், சமரசம் செய்து வைத்துள்ளார்.