ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உ.பி., மாநிலம் மதுராவில், டாய்லெட் திரைப்படக் குழுவினருக்கு, உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர், அக் ஷய் குமார் நடிப்பில், டாய்லெட் - ஏக் பிரேம் கதா என்ற பெயரில், ஹிந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு, உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள கிராமத்தில் நடந்தது. அப்போது, உள்ளூர் பாரம்பரியத்தை தவறாக சித்தரிக்கும் வகையில், படம் தயாரிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்படத்துக்கு, டாய்லெட் எனப் பெயர் சூட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, படப்பிடிப்பு நடந்த கிராமத்தில் பஞ்சாயத்தும் நடந்தது. இதையடுத்து, அந்த படத்தில் இடம்பெறும், திருமணக் காட்சியை நீக்கும்படி, மதுராவைச் சேர்ந்த, 22 கிராமங்களின் தலைவர்கள் சேர்ந்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட்டை சந்தித்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தப் போவதாக, கிராம தலைவர்கள் தெரிவித்தனர். இதனால், படக் குழுவினருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.