ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்தை இயக்கியுள்ள டீகேவுக்கும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் ஏற்பட்ட தகராறு பின்னர் ஒருவழியாய் அடங்கிப்போனது. கவலை வேண்டாம் படம் இந்த வாரம் வெளியாக உள்ளநிலையில் அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி செய்யும் விஷயத்தில் கையைக்கட்டிக் கொண்டுவிட்டார். அதன் காரணமாக கவலை வேண்டாம் படம் இந்த வாரம் ரிலீஸ் என்ற தகவலே மக்களிடம் போய் சேரவில்லை.
இதனிடையே இயக்குநர் டீகே, விக்ரம் பிரபுவிடம் ஒரு கதை சொல்லி கால்ஷீட் கேட்டு வருகிறார். அவரது பதில் கிடைப்பதற்கு முன்பே நயன்தாராவை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். ஏற்கனவே கோபி நயினார் இயக்கத்தில் 'அறம்', தாஸ் ராமசாமி இயக்கத்தில் 'டோரா', சக்ரி டோலட்டி இயக்கத்தில் 'கொலையுதிர் காலம்' ஆகிய 3 படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா. அவரது டேஸ்ட்டை புரிந்து கொண்டு அதேபோன்றதொரு, கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள கதையைச் சொல்லி நயன்தாராவின் டேட்டை வாங்கிவிட்டார். நயன்தாரா டேட் கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குநர் டிகே.,