ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
இல்லற வாழ்வில் கசப்பான அனுபவத்தை சந்தித்த அந்த விஜயமான இயக்குநர், அடுத்தப்படியாக ஜெயமான நடிகரை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். கதையைக் கேட்டு ஓகே சொன்னதோடு, இவ்வளவு கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டிருக்கிறார் நடிகர். பாதி கருப்பிலும் மீதி கணக்கிலும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டதாம். அதன் பிறகுதான் 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர், மொத்த சம்பளத்தையும் செக் அல்லது டிடியாக கேட்கிறாராம். அதோடு வரி தொகையையும் நீங்களே செலுத்த வேண்டும் என்று இயக்குநரிடம் நிபந்தனை போட்டிருக்கிறார். ஏற்கனவே பேசிய சம்பளத்தை கொடுக்கவே தயாரிப்பாளர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லையாம். இப்போது கூடுதலாக வரியையும் கட்ட சொல்வதால் தயாரிப்பாளர் கடுப்பில் இருக்கிறாராம்.