ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இல்லற வாழ்வில் கசப்பான அனுபவத்தை சந்தித்த அந்த விஜயமான இயக்குநர், அடுத்தப்படியாக ஜெயமான நடிகரை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். கதையைக் கேட்டு ஓகே சொன்னதோடு, இவ்வளவு கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டிருக்கிறார் நடிகர். பாதி கருப்பிலும் மீதி கணக்கிலும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டதாம். அதன் பிறகுதான் 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர், மொத்த சம்பளத்தையும் செக் அல்லது டிடியாக கேட்கிறாராம். அதோடு வரி தொகையையும் நீங்களே செலுத்த வேண்டும் என்று இயக்குநரிடம் நிபந்தனை போட்டிருக்கிறார். ஏற்கனவே பேசிய சம்பளத்தை கொடுக்கவே தயாரிப்பாளர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லையாம். இப்போது கூடுதலாக வரியையும் கட்ட சொல்வதால் தயாரிப்பாளர் கடுப்பில் இருக்கிறாராம்.