ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கர்நாடக இசை சாம்ராஜ்யத்தின் இமயம் தொட்ட பால முரளி கிருஷ்ணா, 86, பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த இவர், சாமான்ய மக்களின் மனங்களையும் தனது தெய்வீக குரலால் கொள்ளை அடித்தார். இவரது மரணம் இசை உலகில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்... ‛‛81 வருடங்களாக இசையால் மக்களை மகிழ்வித்தவர், இசையால் பல லட்சம் பேரை வசீகரித்த மகா குரு பாலமுரளி கிருஷ்ணா, அவர் மறைந்தாலும் அவரது இசை இந்த உலகில் ஒலித்துகொண்டே இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி கூறியிருப்பதாவது... ‛‛பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது. தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை, கர்நாடக சங்கீதத்திற்கே பெரும் புகழை பெற்று தந்தவர் அவர்'' என்று கூறியுள்ளார்.
பாடகி வாணி ஜெயராம் கூறுகையில்... ‛‛பள்ளி பருவத்திலேயே அவரை எனக்கு நன்றாக தெரியும். சினிமாவில் அவரோடு இணைந்து பாடியிருக்கிறேன், மிகவும் அன்பாக பழகக்கூடியவர், தான் என்கிற அகம்பாவம் அல்லாதவர், யாரையும் அலட்சியம் செய்ய மாட்டார். 5 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர்களை அனைவரிடமும் ஒரே மாதிரியாக அன்பாக பழகுபவர், அவரின் மறைவு இழக்க முடியாத பேரிழப்பு'' என்று கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛கர்நாடக இசையின் இமயமாக திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா'' என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்... ‛‛பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்திருக்கிறேன். இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு'' என்று கூறியுள்ளார்.