ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கியவர் மீராகதிரவன். 2010ம் ஆண்டு அந்த படம் வெளியானது. அதையடுத்து விழித்திரு என்றொரு படத்தை இயக்கி வந்தார் அவர். அப்படத்தில் விதார்த், சாய் தன்ஷிகா, தம்பிராமைய்யா, வெங்கட்பிரபு, எஸ்.பி.பி.சரண் உள்பட பலர் நடித்தனர். ஆனால் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
அதனால் விழித்திரு படம் பற்றி விசாரித்தபோது, தற்போது அப்படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். காரணம், படத்தைப் பார்த்தவர்கள் சில இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இயக்குனரை கேட்டுக்கொண்டார்களாம். அதனால் சில காட்சிகளை ரீ-ஷீட் செய்து அதை படத்தில் இணைத்து வருகிறாராம். அந்த காட்சிகளைதான் சமீபத்தில் டப்பிங் செய்தார்களாம். ஆக, விரைவில் விழித்திரு படத்தை வெளிக்கொண்டு வரும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.