ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கியவர் மீராகதிரவன். 2010ம் ஆண்டு அந்த படம் வெளியானது. அதையடுத்து விழித்திரு என்றொரு படத்தை இயக்கி வந்தார் அவர். அப்படத்தில் விதார்த், சாய் தன்ஷிகா, தம்பிராமைய்யா, வெங்கட்பிரபு, எஸ்.பி.பி.சரண் உள்பட பலர் நடித்தனர். ஆனால் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
அதனால் விழித்திரு படம் பற்றி விசாரித்தபோது, தற்போது அப்படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். காரணம், படத்தைப் பார்த்தவர்கள் சில இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இயக்குனரை கேட்டுக்கொண்டார்களாம். அதனால் சில காட்சிகளை ரீ-ஷீட் செய்து அதை படத்தில் இணைத்து வருகிறாராம். அந்த காட்சிகளைதான் சமீபத்தில் டப்பிங் செய்தார்களாம். ஆக, விரைவில் விழித்திரு படத்தை வெளிக்கொண்டு வரும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.