ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச படவிழாக்களில் மிகவும் பெரியது கோவா சர்வதேச திரைப்பட விழா. 47வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதனை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வருகிற 28ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 88 நாடுகளைச் சேர்ந்த 195 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. இந்திய படங்களின் போட்டி பிரிவில் தமிழ் படமான இறுதிச்சுற்று திரையிடப்படுகிறது.
நேற்று நடந்த துவக்க விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நூற்றாண்டு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சுமார் 15 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதனை வழங்கினார்.
விருதை பெற்றுக் கொண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது: இந்த விருதை என்னை பெற்றெடுத்த எனது தாய்க்கும். என்னையும் எனது நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். என்னை இசைத்துறையில் பயணிக்க அனுமதித்த என் பெற்றோர்கள். என்னை உருவாக்கிய குருக்கள், வாய்ப்பு அளித்த இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், என் பாடலை கேட்டு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. சினிமாத்துறையில் பயணிப்பதற்காக அப்போதும், இப்போதும், எப்போதும் பெருமை கொள்கிறேன். என்றார்.