ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாய்குலமே தாய்குலமே, கும்பகோணம் கோபாலு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்நாடு மாநில அரசு விருது பெற்றவர் மகேந்திரன். அதேபோல் தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து நந்தி விருது பெற்றார். பின்னர் பல ஆண்டுகளுக்குப்பிறகு விழா என்ற படத்தில் ஹீரோ ஆனவர், விந்தை, விரைவில் இசை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி அவருக்கு ஹிட்டாக அமையவில்லை. இந்த நிலையில், தற்போது ரங்கராட்டினம், நாடோடி கனவுகள் உள்பட 3 படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி மகேந்திரன் கூறுகையில், இந்த படங்கள் மூன்றுமே வித்தியாசமான கதைகள்தான். அதில் ரங்கராட்டினம் படப்பிடிப்பு ஒரு பாடல் காட்சியோடு நிறைவு பெற உள்ளது. சுந்தர் இயக்கும் இந்த படம் பிப்ரவரியில் திரைக்கு வந்து விடும். இதில் எனக்கு ஜோடியாக ஷில்பா என்ற புதுமுக நடிகை நடிக்க, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதைப்படி இந்த படத்தில் நான் பெரிய கேடியாக நடிக்கிறேன். ஆனால் நான் காதலிக்கும் பெண் என்னை விட கேடி. எங்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அது சீரியசாக இருந்தபோதும், ஆடியன்சுக்கு காமெடியாக இருக்கும். முக்கியமாக, இதற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் என்னை ஏமாற்றி விட்டன. ஆனால் இந்த ரங்க ராட்டினம் படம் கண்டிப்பாக எனக்கு வெற்றிப்படமாக அமைந்து பிரேக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மகேந்திரன்