மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தெனாலிராமன், எலி படங்களின் அதிர்ச்சி தோல்வி காரணமாக வடிவேலு நாயகனாக நடிக்க இருந்த இம்சை அரசன்-2 படம் கிடப்பில் கிடக்கிறது. அதன்காரணமாக இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறி வந்த வடிவேலு, தன்னை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராததால் மறுபடியும் காமெடியனாகி விட்டார். கத்திச்சண்டை, சிவலிங்கா படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக் கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், ஏற்கனவே தனது காமெடி நடிப்பினால் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது நடிக்கும் படங்களிலும் தரமான காமெடி காட்சிகளில் நடித்து மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். அதன்காரணமாக, சமீபகாலமாக கல்லூரி இளைஞர்களே பெருவாரியாக தியேட்டர்களுக்கு வருவதால், அவர்கள் அதிகமாக பேசிக்கொள்ளும் வார்த்தைகளை தனது காமெடிகளில் சேர்த்து நடித்து வருகிறார். அதனால் அவருக்கு காமெடி ட்ராக் எழுதுபவர்கள், தற்போதைய இளவட்டங்கள் பேசும் ஜாலியான வார்த்தைகளை வடிவேலுவின் கவனத்துக்கு கொண்டு சென்று விவாதத்திற்குப்பிறகு அதை காமெடி வசனங்களில் இணைத்து வருகின்றனர்.