ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல தமிழில் மிகுந்த இழுபறிக்குப்பின் வெளியான படங்கள் மலையாள நடிகைகளை முன்னணிக்கு ஏற்றிவிடவே செய்திருக்கின்றன.. தாமதமாக வெளியான ரஜினி முருகன் கீர்த்தி சுரேஷை முன்னணி நடிகையாக மாற்றியது என்றால், அதேபோல ரொம்பவே இழுபறிக்குப்பின் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த நடிகையாகி விட்டார் மஞ்சிமா மோகன். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் வருகிறார்..
ஆனால் இவர் மலையாளத்தில் முதன்முதலில் நடித்த ஒரு வடக்கன் செல்பி படத்தில் அழுது வடியும் உம்மணா மூஞ்சியாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் அவர் அடிக்கடி பேசிய மலையாள வசனம் “எனக்கு ஹரியினை காணனும்” என்பதுதான். இந்த வசனத்தை வைத்துதான் படம் வெளியானபோது ரொம்பவே கிண்டலுக்கு ஆளானார் மஞ்சிமா. நிறைய பேர் “அம்மா.. நீ எங்களுக்கு உதவி செய்வதாக இருந்தால் தயவு செய்து நடிப்பதை நிறுத்திவிடு” என்றெல்லாம் கலாய்த்தார்கள்.
தற்போது அச்சம் என்பது மடமையடா அவரை நல்ல நடிப்புத்திறன் உள்ளவராக அடையாளம் காட்டியுள்ளது.. ஆனாலும் மஞ்சிமாவை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொள்ளும் பல ரசிகர்கள், இன்னும் கூட அந்த வசனத்தை சொல்லி கிண்டலடிக்கிறார்களாம். அப்போ அந்தப்படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு, அறிமுகப்படம் வேறு.. அதற்காக அதே கேள்வியை கேட்டு இப்போதும் கிண்டலடிப்பது எந்தவகையில் நியாயம்” என பொங்குகிறாராம் மஞ்சிமா மோகன்.