ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
திரையுலகத்தைப் பொறுத்தவரை 'அட்வைஸ்' என்பது அடுத்தவர்களுக்குத்தானே தவிர, அதை சொல்பவர்கள் அதை பின்பற்றவே மாட்டார்கள். அப்படித்தான் ஒரு விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவருமே அவர்களது சொந்தக்காரர்களின் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக நடித்து வருகிறார்கள். வேறு யாருடைய நிறுவனங்களின் படங்களிலும் அவர்கள் அதிகமாக நடிப்பதேயில்லை. ஆனால், இதை திரையுலகத்தில் உள்ள யாரும் கேட்பதே கிடையாது. அதே சமயம் எந்த பின்னணி பலமும் இல்லாமல் திரையுலகத்தில் தனது சொந்த திறமையால் முன்னேறிய ரஜினிகாந்த், அஜித் போன்று சிவகார்த்திகேயன் முன்னேறி வருவது திரையுலகத்தில் உள்ள சிலரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
சிவகார்த்திகேயனுக்கு நான் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன், அவர் எனது படத்தில் நடித்துவிட்டுத்தான் அவருடைய நண்பர் ராஜா தயாரிக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவரும் சூர்யாவின் நெருங்கிய சொந்தக்காரர்களில் ஒருவர். சூர்யா, கார்த்தி இருவரும் தொடர்ந்து அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் படங்களில் நடிப்பதைப் பற்றி எதுவுமே சொல்லாத ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன் மட்டும் அவரது நண்பர் நிறுவனப் படங்களில் நடிப்பதை ஒரு குறையாகச் சொல்லி வருவதை திரையுலகத்தில் உள்ள சிலர் கிண்டலடிக்கிறார்கள்.