ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கும் புதிய படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சத்யா இசை அமைத்துள்ளார். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தை வாங்க யாரும் முன்வராததால் டிசம்பர் 23ந் தேதி தானே வெளியிடப்போவதாக பார்த்திபன் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் எனது புதிய முயற்சி. குடைக்குள் மழை, ஹவஸ்புல் படங்கள் போன்று ரசிகர்கள் இதையும் கைவிட்டுவிடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் வெற்றி பெற வைத்தார்கள். மக்களின் ரசனை மாறியிருக்கிறது. மேம்பட்டிருக்கிறது. அந்த தைரியத்தில்தான் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தையும் இயக்கி இருக்கிறேன்.
ஒரு வெற்றிப் படம் கொடுத்தால் தயாரிப்பாளர்கள் தேடி வருவார்கள் என்று நினைத்தேன், வந்தார்கள். ஒரு தயாரிப்பளார் 3 கோடிக்கு செக் கொடுத்தார், இன்னொருவர் ஒரு கோடிக்கு கொடுத்தார். இன்னொருவர் ஒரு கோடிக்கு 3 கோடி செக் கொடுத்தார். நானும் கதையை தயார் செய்து விட்டு அவர்களுக்காக காத்திருந்தேன். செக்குகள்தான் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததே தவிர தயாரிப்பாளர்கள் வரவில்லை. ரசிகர்கள் என்னை நம்பிய அளவிற்கு தயாரிப்பாளர்கள் நம்பவில்லை என்று புரிந்தது.
அதனால் கிரவுட் பண்டிங் முறையில் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். அதிலும் தோல்விதான். பத்து பேர் ஆளுக்கு 10 லட்சம் என்னை நம்பி கொடுத்தார்கள். அதோடு என்னுடைய சில சொத்துக்களை விற்று நானும் பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்துவிட்டேன்.
இப்போதெல்லாம் கதை பெரிய விஷயமில்லை. தாத்தா பாட்டி காலத்திலிருந்து கதை கேட்கிறோம். இந்தப் படத்தில் ஒரு வரி கதைதான். அதை எப்படி சுவாரஸ்யமாக தருகிறேன் என்பதுதான் படம். காமெடி, ரொமான்ஸ், திகில், ஆக்ஷன் எல்லாமே இருக்கிற மாதிரியான கதை. படத்தில் சில தவறான மனிதர்கள் வருகிறார்கள். எல்லா மனிதர்களுமே தவறு செய்கிறவர்கள்தான்.
படத்திலும் சில தவறுகள் கண்டுபிடிக்கப்படலாம். ரசிகர்கள் கண்டுபிடித்து சொல்வதற்கு முன்பே நானே இது தவறுகள் நிறைந்த படம் என்று இப்போதே சொல்லிவிடுகிறேன். ஆனால் சுவாரஸ்யப்படுத்தும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். படத்தை முடித்து விட்டேன். வெளியீட்டுக்கு பெரிய பட்ஜெட் வேண்டும். அது என்னிடம் இல்லை. மீடியாக்களையும், ரசிகர்களையும் நம்பி இருக்கிறேன். என்றார் பார்த்திபன்.