சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஈட்டி, கணிதன் படங்களுக்குப்பிறகு ருக்குமணி வண்டி வருது, செம போதை ஆகாத போன்ற படங்களில் நடித்தார் அதர்வா. இதில் செம போதை ஆகாத படத்தை அவரே தயாரித்தார். பாணா காத்தாடி படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்த பத்ரி அந்த படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வெளிவர தாமதமாகி வருகிறது. அதேபோல் ருக்குமணி வண்டி வருது படமும் தாம தமாகிக்கொண்டிருக்கிறது.
இருப்பினும், அதர்வா மார்க்கெட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது சுருளிராஜனும் ஜெமினிகணேசனும், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அந்த படத்தை ரஞ்சித்தே இயக்குகிறாரா? இல்லை அவர் தயாரிக்கிறாரா? என்பது பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை. ஆக, சத்தமில்லாமல் நடித்துக்கொண்டிருக்கும் அதர்வாவும், பரபரப்பு வளையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.