விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பஞ்சாபை சேர்ந்தவர் மெஹ்ரீன். பரதநாட்டிய கலைஞராக வாழ்க்கையை தொடங்கி மாடலாக மாறியவர். அதன் பிறகு இந்த ஆண்டின் துவக்கதில் வெளிவந்த தெலுங்கு படமான கிருஷ்ணா காடி வீர பிரேம கதா மூலம் நடிகையானர். இதில் அவர் நானிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது துவடா ஜெகன்னாதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் அங்கு பில்லாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் மெஹ்ரீன். மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு சுசீந்திரன் தெலுங்கு, தமிழ் மொழியில் இயக்கும் புதிய படத்தில் மெஹ்ரீன்தான் ஹீரோயின். சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கிறார்.
"நிறைய பஞ்சாபி பெண்கள் தமிழ் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். நானும் அந்த வரிசையில் இடம்பிடிப்பேன் என்று நம்புகிறேன். தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் கமிட் ஆனபிறகு சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு, ஜீவா, நான் மகான் அல்ல படங்கள் பார்த்தேன். நல்ல திறமையான இயக்குனருடன் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன்" என்கிறார் மெஹ்ரீன்.