பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
அவன் இவன், பாகன், தெகிடி படங்களுக்குப்பிறகு தமிழ் சரியான படங்கள் இல்லாமல் மலையாளத்துக்கு சென்று விட்டார் ஜனனி. ஆனபோதும் தமிழ்நாட்டு பெண்ணான அவருக்கு தமிழ் படங்களில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் தொடர்ந்து புதிய படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் பலூன், அதே கண்கள் படங்கள் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இதில் ஜெய்யுடன் பலூன் படத்திலும், அதே கண்களில் கலையரசனுடனும் நடிக்கும் ஜனனி, விரைவில் திரைக்கு வரும் அதே கண்கள் படம் தனக்கு தமிழில் நல்லதொரு ரீ-என்ட்ரியாக இருக்கும் என்கிறார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து அவர் கூறும்போது, இந்த படத்தில் நான் ஒரு துணிச்சலான நிருபராக சாதனா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். எனக்கு பிடித்தமான நிருபர் வேடம் என்பதால் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளேன். மேலும், இந்த படம் ஏற்கனவே வெளியான டைட்டீல் என்றபோதும் இந்த கதைக்கு அது தேவைப் பட்டதால் அதே கண்கள் என்று வைத்துள்ளனர். அதற்கேற்றார் போல் இரண்டு கண்களை மையமாக வைத்துதான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என்கிறார் ஜனனி அய்யர்.