அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
இந்திய மில்லினியர்களில் ஒருவரும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமண விழா நவ.,16-ல் நடக்க இருக்கிறது. இந்தியாவிலேயே ஆடம்பரமான திருமணமாக இது இருக்கப்போகிறது. அழைப்பிழுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவிடுகிறார்கள். ஒரு அழைப்பிதழின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு திருமணத்துக்கு முந்தைய நலுங்கு சடங்குகள் நடந்தது. இதில் ரெட்டி குல வழக்கப்படி பெண்கள் ஆடிப்பாடுவது வழக்கம். மணமகளை குதூகலப்படுத்துவதற்காக இப்படி செய்வதுண்டு.
தென்னிந்திய மொழிகளிலிருந்து மணமக்களை வாழ்த்தும் 40 திரைப்பட பாடல்கள் தொகுக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடல் ஒலித்தபோது தமிழ் நடிகைகள் சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனமாடினர். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. நடனம் ஆடுதற்காகவே பெரும் தொகை சம்பளமாக கொடுத்து இவர்கள் அழைத்து வரப்பட்டனர் என்று ஒரு சாராரும், மணவீட்டாரின் அழைப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியால் ஆடினார்கள் என்று ஒரு சாராரும் தெரிவிக்கிறார்கள்.