ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி ராஜமவுலியின் பாகுபலி-2 படம் திரைக்கு வருகிறது. பாகுபலி படத்தின் க்ளைமாக்சில் பாகுபலியை கட்டப்பா கொன்றதாக கதையை முடித்து விட்டார் ராஜமவுலி. அதனால் இப்போது கட்டப்பா எதற்காக பாகுபலியை கொன்றார் என்கிற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இதனால் ராஜமவுலி உள்பட அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு சென்றாலும் அதுகுறித்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்றிருந்த தமன்னாவிடமும், பாகுபலியை எதற்காக கட்டப்பா கொன்றார் என்றுதான் கேட்டார்களாம். ஆனால் அதற்கு பதில் கொடுக்காத தமன்னா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பார்த்து சந்தோசமடைந்தாராம். அதோடு, பாகுபலியை விட இரண்டாம் பாகத்தில் எனக்கு இன்னும் அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் உ ள்ளன. அந்த வகையில் பாகுபலியில் பார்த்த அவந்திகாவை விட இரண்டாம் பாகத்தில் வரும் அவந்திகா இன்னும் புரட்சிகரமான தைரியமான பெண்ணாக தெரிவார் என்று சொன்ன தமன்னா, நான் இதுவரை நடித்ததில் அவந்திகா என்னால் மறக்க முடியாத கேரக்டர் என்றாராம்.