ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார் செல்வராக வன். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ரெஜினா, நந்திதா உள்பட பலர் நடித்துள்ளனர். இறைவி படத்திற்கு பிறகு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, தன் மனசுக்கு பிடித்தமான படமாக கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து விட்ட இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.
இந்த நிலையில், அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த படத்தை தயாரிக்கயிருப்பதாக கூறப்பட்ட வந்த நடிகர் பிரபு, செல்வராகவன் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டது. அதனால் இந்த படம் கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
ஆக, பைரவா படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடிக்கயிருக்கும் விஜய், அந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.