ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்த படம் என்பதால் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல் சிம்பு படப்பிடிப்புக்கு மட்டம் போட, கௌதம் மேனன் கடுப்பாக ஒரு கட்டத்தில் அச்சம் என்பது மடமையடா ட்ராப்பாகும் சூழல் உருவானது.
முதல்பாதி காதல், இரண்டாம்பாதி ஆக்ஷன் என ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முதலில் பல்லவி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு படம் வளராமல் முடங்கிப்போனதால் ஒரு கட்டத்தில் பல்லவி விலகிச்சென்றுவிட்டார். அதன் பிறகு மஞ்சிமா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்காக திரையிடப்பட்டது. 'அச்சம் என்பது மடமையடா' படத்தை பார்த்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கியது சென்சார். இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் படத்தை வரும் 11ஆம் தேதி வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர்.
'அச்சம் என்பது மடமையடா' படத்துடன் கடவுள் இருக்கான் குமாரு, மீன்குழம்பும் மண்பானையும் படங்கள் இந்த வாரம் வெளிவருவதால் மூன்று படங்களுக்கும் எந்தளவு தியேட்டர் கிடைக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.