ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண் சாய் பல்லவி. வெளிநாட்டில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தவர் சும்மா ஜாலிக்காக மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவும் மலர் டீச்சர் கேரளா முழுவதும் பிரபலமாகி விட்டார். நிறைய வாய்ப்புகள் வந்தது. நடிப்பதா? படிப்பதா? என்ற குழப்த்தில் இருந்தவர். பேலன்ஸ் இருந்த ஒரு வருட படிப்பை முடித்து டாக்டர் பட்டத்தை வாங்கிய கையோடு மீண்டும் நடிக்க வந்து விட்டார்.
இதற்கிடையில் அவர் அந்த தமிழ் படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் நடிக்கிறார். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனை மறுத்துள்ளார் சாய் பல்லவி.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்பது உண்மை. ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை என்பது அதைவிட உண்மை. அப்படி இருக்கும் போது எப்படி இந்த மாதிரியான செய்திகள் வருகிறது என்று தெரியவில்லை. நடிக்க வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்வதில் நியாயம் இல்லை. கேரக்டருக்கு தேவையென்றால் செய்யத்தான் வேண்டும். ஆனால் அது திணிப்பாகவோ அல்லது வேறு நோக்கத்துக்காகவோ இருந்தால் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், கேரக்டரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்கிறார் சாய் பல்லவி.