ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்சேதுபதி நடித்துள்ள படம் மெல்லிசை. தற்போது இதன் பெயர் புரியாத புதிர் என்று மாற்றப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியுடன் காயத்ரி நடித்துள்ளார். வித்தியாசமான காதல் பிளஸ் த்ரில்லர் கதையான இதை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேபெல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரித்துள்ளனர். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டாகி உள்ளது. படம் ரிலீசுக்கு தயாராகி 2 வருடங்கள் ஆகிறது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ்குமார் படத்தை வாங்கி வெளியடுகிறார்.
"தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் மாஸ் ஹீரோ அந்தஸ்து, இந்த புரியாத புதிர் டிரைலரின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். அதுமட்டுமின்றி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்ற விஜய் சேதுபதி - காயத்ரி கூட்டணி, மீண்டும் இந்த படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலம். புரியாத புதிர் ஆக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் தொழில் நுட்ப ரீதியாக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் ஜே சதீஷ் குமார்.