ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு-வரலட்சுமி நடித்த போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ்சிவன். அதையடுத்து விஜயசேதுபதி- நயன்தாரா நடிப்பில் நானும் ரெளடிதான் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று விக்னேஷ்சிவனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதோடு அந்த படத்தை இயக்கி வந்தபோது நயன்தாராவுக்கும், அவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் முன்னணி ஹீரோவை வைத்துதான் தனது மூன்றாவது படத்தை இயக்க வேண்டும் என்று சில மேல்தட்டு ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வந்த விக்னேஷ்சிவன், சூர்யாவிடம் தானா சேர்ந்த கூட்டம் கதையை சொல்லி ஓகே பண்ணிவிட்டார்.
ஆனால் அந்த படத்திலும் நயன்தாராதான் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்தி வெளியானது. அதே சமயம், தானா சேர்ந்த கூட்டம் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாராவும் தயாரித்து வருவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கார்த்தியுடன் நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள காஷ்மோரா படத்தை பார்த்து விட்டு, காஷ்மோராவில் கார்த்தி சிறப்பா கநடித்துள்ளார். ஆனால் நயன்தாரா மேஜிக்கல் பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ்சிவன்.